ஒன்பதாம் பாவம் குறிக்கும் காரகங்கள்
பாக்கியஸ்தானம் எனப்படும் சென்ற பிறவியில் செய்த புண்ணியத்தை அனுபவிக்கும் பாவம். பாவாதி பாவம் என்ற விதிப்படி 5 ஆம் பாவத்திற்கு 5-ஆம் பாவமே 9-ஆம் பாவம். தான தருமம் செய்யும் குணம், திருக்கோவில்களை கட்டும் பணியில் ஈடுபடுதல், அவைகளை புணருதாரணம் செய்தல், கும்பாபிஷேகம் செய்தல் போன்ற திருப்பணிகளில் ஈடுபடும் தன்மை, ஆன்மீக உணர்வு, அயல்நாடு செல்லும் நிலை, அங்கு பெறும் பணி, தொழில்கள் அவைகளால் பெறும் லாப நஷ்டம், நன்றியுணர்வு, இவைகளை தெரிவிக்கும் பாவம்.
தர்மம் என்பது கேட்டுக்கொடுப்பது, தானம் என்பது கேட்காமலே கொடுப்பது. அறம் என்பதை 32 வகைகளில் செய்யலாம் என கூறியுள்ளார்கள்.
தானத்திலே சிறந்தது அன்ன தானமும், கல்வி தானமுமாகும். பசித்தோர்க்கு உணவு கொடுப்பது சிறந்த தானமாகும். ஏழைக்குழந்தைகளுக்கு கல்வி பெற உதவி செய்வதும் சிறந்த தொண்டாகும். வசதி படைத்தோர் அவரவர் தகுதிக்கேற்ப தான தர்மம் செய்வதை உணர்த்தும் இடமாகும். மனித நேயமுடையவரா, ஜீவ காருண்ய சீலரா என்பதையும் தெரிவிக்கும் இடம்.
No comments:
Post a Comment