மாமன்மார்களின் உறவு, தந்தை வழி உறவுகள், குழந்தை செல்வம், பூர்வ புண்ணியம், சென்ற பிறவியில் பெற்ற நன்மை தீமைகளை அதன் அளவை தெரிவிக்கும் பாவம், தமிழ் மொழியில் தேர்ச்சி, மந்திரங்களை அறியும் திறமை, உயர்கல்வி பெறும் தகுதி, அறிவாற்றல், அனுபவ அறிவு, சொற்பொழிவு செய்யும் திறமை, கதாகாலட்சேபம் செய்யும் திறமை கர்ப்பம் தரிக்கும் தகுதி, தாத்தாவின் நிலை, இனிமையாக பேசுவது, மந்திர உபதேசம் செய்தல், ஆலோசனை கூறுதல் போன்றவற்றை தெரிவிக்கும் பாவம்.
சிறப்பாக புத்திரபாவம், பூர்வ புண்ணிய பாவம் எனப்படும் குருவையும் 5 ஆம் பாவத்தையும் அறிந்து குழந்தை செல்வத்தையும் அறியலாம்.
புதனையும் 5 ஆம் பாவத்தையும் அறிந்து கல்வி பெறும் தகுதி, ஆன்மீக சிந்தனை, மந்திரங்கள் கற்பது, மந்திரங்களை உபதேசிப்பது, பிரார்த்தனை செய்வது இவைகளை அறியலாம். சொற்பொழிவாற்றும் தகுதி, கதாகாலட்சேபம் செய்யும் வாய்ப்பு இவைகளை அறியலாம்.
No comments:
Post a Comment