Thursday, July 1, 2010

நான்காம் பாவம் குறிக்கும் காரகங்கள்

நான்காம் பாவம் குறிக்கும் காரகங்கள்

உயர் கல்வி, வாகனம், வீட்டில் நடைபெறுகின்ற சுப நிகழ்ச்சிகள், வசிக்கும் வீடு, வியாபாரம், தாய் நலம், தாயின் உறவினர் நிலை, அவர்களுடனான உறவு, புகழ் பெறும் நிலை, புதையல் கிடைக்கும் யோகம், தாயின் ஒழுக்கம், பால், பால் பொருட்கள், பசு பண்ணை, திருத்தல் தரிசனம், சிறுதூர பிரயாணம், அதனால் ஏற்படும் நன்மை, ஆலோசனை பெறும் வாய்ப்பு, கனவுகள், மருந்துகள், அதிகாரம் செய்யும் தகுதி இவைகளையும் பொதுவாக வீட்டைப்பற்றியும், சுகத்தைப்பற்றியும் தெரிவிக்கும் பாவமாகும்.

4 ஆம் பாவத்தையும் புதனின் பலத்தையும் அறிந்து ஒருவரின் கல்வி அதாவது உயர்கல்வி பெறுவதை அறியலாம்.

4 ஆம் பாவத்தையும் சுக்கிரனின் பலத்தையும் அறிந்து கார், மோட்டார் சைக்கிள் போன்ற வாகன, ஆபரணம் பெறும் நிலையை அறியலாம்.

4 ஆம் பாவத்தையும் செவ்வாயையும் அறிந்து அவர்களின் பலத்தை பொறுத்து அசையாத சொத்துக்கள் அதாவது வீடு, நிலம், தோட்டம், பண்ணை வீடுகள் இவைகளை அறியலாம்.

4 ஆம் பாவத்தையும் குருவின் பலத்தையும் அறிந்து வாழ்க்கையில் அனைத்து வசதிகளையும், சுகம் பெறும் நிலையையும் புகழ் பெறும் தகுதியையும் அறியலாம்.

No comments:

Post a Comment